விடுவிக்கப்பட்ட தமிழினிக்கு காத்திருக்கும் விலங்கு!!
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி இன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்க கட்சியின் வேட்பாளராகத் தமிழினி போட்டியிடவுள்ளர் என்றும் அதற்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வரும் செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் தமிழினி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு என்ன நடந்ததென்று இன்றுவரை தெரியாத நிலையில் தமிழினி அவர்களை சிறீலங்கா அரசு வெளிப்படையாக தடுத்து வைத்திருந்ததோடு நீதிமன்றத்தில் ஆஜார்படுத்துவதனூடாக தமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளது போன்று உலகை ஏமாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது
Average Rating