ஈராக்கில் ஷியா பிரிவினர்மீது கொடூர தாக்குதல் 60 பேர் பலி!!
ஈராக்கில் ஷியா – சன்னி பிரிவினரிடையே நடைபெற்று வரும் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரையிலான 2 மாத காலத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மோதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். நேற்றும், ஷியா பிரிவினர் சிறுபான்மையாக வாழும் ஷூவாலா, கமாலியா, ஷாப் பகுதிகளில் மற்றொரு பிரிவினர் நடத்திய தாக்குதல்களில் 60 பேர் பலியாகினர்.
இப்பகுதியில் உள்ள கடை வீதிகளில் நடைபெற்ற வெடி குண்டு தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். 61 பேர் படுகாயமடைந்தனர். மேலும், இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். வடக்கு பாக்தாத்தில் உள்ள ஷாப் பகுதி கார் உதிரிபாகங்கள் விற்கும் சந்தையில் கார் குண்டுகள் வெடித்ததில் 9 பேர் பலியாகினர்.
ஷூலா பகுதி சந்தையில் நடைபெற்ற 2 குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 2 போலீசார் உட்பட 12 பேர் பலியாகினர். கமாலியாவில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 5 பேரும், டோரா பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 4 பேரும் பலியாகினர். பாக்தாத் நகரில் நிகழ்ந்த நேற்றைய தாக்குதல்களில் மட்டும் 60க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
Average Rating