சேது சமுத்திர திட்டத்தின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும்!!
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அனித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய நாணய மதிப்பு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 3 வருடங்களில் குறைந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லா வங்கிகளும் லாபத்தை பெற்று உள்ளது. தொழில்துறையின் உற்பத்தி குறைந்து உள்ளது தவிர வீழ்ச்சி அடையவில்லை.
உணவு தானியம் உற்பத்திக்கு மழையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். எனவே உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நதிநீர்இணைப்பு திட்டத்தை மத்திய அரசு குறிப்பிட்ட கால வரம்புக்குள் அறிவிக்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் போது கடலோர மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றிய அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் 2006–ம் ஆண்டு தொடங்கபட்டது. சேது சமுத்திரத்தின் நிலை எந்த அளவுக்கு உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி பிரச்சினையில் முதலுதவியாக, இடைக்கால நிவாரணம் போல் தமிழக அரசு 5 சதவீத பங்குகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என அறிவித்துள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்களும் தங்களது பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. நெய்வேலியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating