கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் இழுபறி தொடர்கிறது!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றிரவு 8 மணியளவில் (12.07.2013) ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் கூட்டம் கலைந்ததுடன், தொடர்ந்து இதுபற்றி பேசுவதற்கு இன்றையதினம் மீண்டும் கூடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
Average Rating