போதைக் கடத்தல் கும்பல் தலைவன், டிரிவினோ மொரேல்ஸ் கைது..!!
சர்வதேச போதைக் கடத்தல் கும்பல்கள், மெக்சிகோவில் தான் அதிகமாக செயல்படுகின்றன. இதில், பல பிரிவுகள் உள்ளன. மெக்சிகோ அரசுக்குக் கட்டுப்படாமல் பயங்கர ஆயுதங்களுடன், இந்தக் கும்பல்கள், தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. மெக்சிகோவில் சமீபத்தில் பொறுப்பேற்ற அதிபர், என்ரிக் பெனா நீட்டோ, போதைக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதி அளித்திருந்தார். பலரைக் கொன்று குவித்து, அட்டகாசம் செய்து வந்த, போதைக் கும்பலின் தலைவன், டிரிவினோ மொரேல்ஸ், 40. இவனைப் பிடித்துத் தருவோருக்கு, அமெரிக்க அரசு, 30 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தது. இதற்கிடையே, மெக்சிகோ, அமெரிக்க நாடுகளின் எல்லையில், காரில், தன் மூன்று கூட்டாளிகளுடன் சென்று கொண்டிருந்த மொரேல்சை, மெக்சிகோ நாட்டுக் கடற்படையினர், சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இந்தக் கைது சம்பவத்தின் போது, துப்பாக்கிச் சண்டை ஏதும் நடக்கவில்லை. கைது செய்யப்பட்ட மொரேல்சிடமிருந்து, 8 துப்பாக்கிகளும், 12 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. மொரேல்ஸ் கைது செய்யப்பட்டு உள்ளதால், இனி போதைக் கடத்தல் கும்பலுக்கு, அவனது தம்பி, ஓமர் தலைமை வகிப்பான் என, கூறப்படுகிறது.
Average Rating