கார்த்திக் படத்துக்காக கண்டிசனை தளர்த்திய நஸ்ரியா நசீம்..!
நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீமுக்கு கோலிவுட்டில் எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் படத்தில் அவர் பெரிய அளவில் ஒன்றும் நடிக்கவில்லை. ஆனபோதும் அவரிடம் என்னதான் நடிப்பை பெரிதாக கண்டார்களோ, ஆர்யாவின் ராஜாராணி, தனுசின் நய்யாண்டி படத்துக்கு அவரை புக் பண்ணி நடிப்பையும் கண்டபடி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
இதனால் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நஸ்ரியா, இப்போது யானையின் பலம் அதற்கே தெரியாதது போல் நம்முடைய அழகும், திறமையும் நமக்கே தெரியாமல் இருந்திருக்கிறது என்று இப்போது தன்னை முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கொண்டு திரிகிறார். அதோடு, 100 சதவிகிதம் நடிப்பை வெளிப்படுத்தும் நான் 10 சதவிகிதம் கூட கிளாமர் காட்டமாட்டேன் என்றும் தில்லாக பேசி வந்தார்.
இந்தநிலையில்தான் அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் புதிய படவாய்ப்பு நஸ்ரியாவை நாடிச்சென்றது. கதையை சொல்லும்போதே இது கமர்சியல் படம். அதனால் பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்படும் என்று சொன்னார்களாம். அதோடு, சமந்தா, அமலாபால் என்று சில நடிகைகள் இந்த படத்துக்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றொரு பிட்டையும் எடுத்து போட்டார்களாம்.
அதனால், தனது பில்டப் இவர்களிடம் எடுபடாது. மீறி விட்டால் படம் கைவிட்டு போய் விடும் என்று நினைத்த நஸ்ரியா, ஓவராக என்னை தோலுரித்து விடாதீர்கள், தாங்கமாடடேன் என்று நாசூக்காக சொல்லி படத்தை கேட்ச் பண்ணி விட்டாராம்.
Average Rating