தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமையால் சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..!!

Read Time:1 Minute, 36 Second

telo.selvam-posterதமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமையால் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
 
அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக கடந்த வருடம் நவம்பர் மாதம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். 
 
7 மாதங்கள் கடந்த நிலையிலும் அரசினால் இன்னும் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை. அரசுக்கான கால அவகாசம் இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. அதற்குள் தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சனை தீர்கப்படாது போனால் நான் கூறியபடி எதிர்வரும் நவம்பரில் இருந்து சாகும் வரை உண்ணாவிரதப் போட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
 
 
இதேவேளை, இதற்கு ஆதரவு வேண்டி டெலோ அமைப்பினரால் முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன.
 
 
வவுனியாவில் இருந்து அதிரடி இணையத்தள செய்தியாளர் கரிகாலன்
telo.selvam-poster
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாண கோலத்தில் வீதியில் சண்டையிட்ட தம்பதி..!
Next post பெண்களின் தொடைகளை விளம்பரங்களை வெளியிட பயன்படுத்தும் ஜப்பான்..!!