துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 24 Second
அநுராதபுரம் புலியங்குளம் பகுதியில் வன இலாகா அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பொன்று தொடர்பில் குறித்த நபர் வன இலாகா அதிகாரியுடன் தகராறில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வன இலாகா அதிகாரியின் வீட்டுக்குச் சென்று ஆயுதமுனையில் அச்சுறுத்தல் விடுத்தவர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான வன இலாகா அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Average Rating