முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியை வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு..!!

Read Time:2 Minute, 42 Second

1416herathவடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் ஒரு­வ­ரினால் முழந்­தா­ளிட வைத்து தண்­டனை அளிக்கப்­பட்ட நவ­கத்­தே­கம நவோ­தயா பாட­சா­லையின் ஆசி­ரி­யை­யான சுசீலா ஹேரத்தின் வீட்­டுக்கு தற்­போது பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

புத்தளம், ஆன­மடுவ நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய கடந்த வியா­ழக்­கி­ழமை தொடக்கம் இந்த பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

முழந்­தா­ளிட்ட சம்­பவம் தொடர்பில் நவ­கத்­தேகம் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்­பினர் ஆனந்த சரத் குமார பிணையில் விடு­விக்­கப்­பட்ட பின்னர் பிணை நிபந்­த­னை­யினை மீறி குறித்த ஆசி­ரியை மற்றும் அவ­ரது கண­வ­ருக்கும் அச்­சு­றுத்தல் விடுத்தார் என்ற குற்­றச்­சாட்டில் அவ­ரது பிணை நிரா­கரிக்­கப்­பட்டு மீண்டும் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை இந்த வழக்கு ஆன­மடுவ நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டபோதே அவ­ருக்கு அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்போதே குறித்த ஆசி­ரி­யையின் வீட்­டுக்குப் பாது­காப்பு வழங்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இதன்­ பி­ர­காரம் அங்கு இரு பொலிஸார் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை, குறித்த  சம்­ப­வத்தின் மற்­று­மொரு சாட்­சி­யா­ள­ரான அப்­பா­ட­சா­லையின் பிரதி அதிபர் ஒரு­வரின் வீட்­டுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அவரது வீடு  கல்­க­முவ பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவை நவகத்தேகம பொலிஸார் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 47 வயது இளமைப் பெண் சத்திரசிகிச்சை மூலம் வயதான தோற்றத்தை அடைய ஆவல்..!!
Next post கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..!!