குப்பையில் போட்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு 79 கோடி ரூபா பரிசு..!!
அமெரிக்காவில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வாங்கிய தம்பதியர், கவனமில்லாமல், குப்பைத் தொட்டியில் வீசிய அதிர்ஷ்ட சீட்டுக்கு ஆறு கோடி ரூபா பரிசு (சுமார் 79 கோடி ரூபா) கிடைத்துள்ளது.
அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியர் ஜோசப், ஜோனி ஜகாமி. அட்டில்பரோ நகரில் உள்ள, பலசரக்குக் கடையில் பொருட்களை வாங்கினர்.
அதன் பின், அங்கிருந்த அதிர்ஷ்ட இயந்திரத்தில், 300 ரூபாவுக்கு அதிர்ஷ்ட சீட்டை பெற்றனர். வீட்டுக்கு சென்ற ஜோனி, பலசரக்கு சாமான்களை எடுத்து கொண்டு, அதிலிருந்த அதிர்ஷ்ட சீட்டை கவனமில்லாமல், குப்பை கூடையில் போட்டு விட்டார்.
மறுநாள், இது குறித்து ஜோசப் விசாரித்த போது, அதிர்ஷ்ட சீட்டை குப்பை கூடையில் போட்ட விடயத்தை கூறினார் ஜோனி. உடனடியாக அந்த சீட்டை, குப்பை கூடையில் கிளறி எடுத்து, சுரண்டிப் பார்த்ததில், ஆறு கோடி ரூபா பரிசு (சுமார் 79 கோடி ரூபா) விழுந்தமை தெரிய வந்தது.
இந்த பணத்தில் கடன்களையெல்லாம் அடைத்து விட்டு, சுற்றுலா செல்ல இத்தம்பதியர் திட்டமிட்டுள்ளனர்.
Average Rating