30 நிமிடங்களில் 7 பேரை கடித்த நாய்கள்..!!
Read Time:1 Minute, 7 Second
நாய்க்கடிக்கு இலக்காகிய நிலையில் 30 நிமிடங்களுக்குள் ஏழு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.
யாழ். நகரப் பகுதியிலேயே நேற்று காலை வேளையில் சுமார் 30 நிமிடங்களுக்குள் நாய் கடித்துள்ளது. அதில் ஒரு நாய் 5 பேரையும் நீர்வேலி பகுதியில் மற்றொரு நாய் இரண்டு பேரையும் கடித்துள்ளது.
நாய்க்கடிக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் என். சுப்பிரமணியம் (வயது 72) ரீ.தர்ஷிகா (வயது 3) ரி. பரமேஸ்வரன் (வயது 69) சிவகுமார் லோரன்ஸ், செல்வநாயகம் போஜினி (வயது 23) தவேந்திரன் ரவீந்திரன் (வயது 38) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating