தனது மகளை கடத்த வந்த இளைஞரை கொன்ற தாய் பொலிஸாரால் கைது..!!
தனது மகளை கடத்திச் செல்ல வந்ததாகக் கூறப்படும் 27 வயது இளைஞரொருவரை இரும்புப் பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயாரை தம்புள்ள பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
தம்புள்ள பொஹரன் வௌ என்ற இடத்தில் வீடொன்றின் சமயலறையில் இக் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருந்தது. இப்பிரதேசதைச் சேர்ந்த திருமண மாகாத சந்தன ருவன் குமார (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட தம்புள்ள பொலிஸார் வீட்டின் உரிமையளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அடிக்கடி தம் வீட்டிற்கு வந்து சென்ற இவ் இளைஞர் சம்பவதினம் தனது 14 வயது மகளை கடத்திச் செல்ல முற்பட்டு மகளின் கையைப் பிடித்து இழுத்த போது அதனைத் தடுக்க முற்பட்ட போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை தம்புள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating