பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்..!!
இந்தோனேஷியாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு, இலட்சக்கணக்கான பெறுமதிமிக்க பொருட்களை கும்பலொன்று திருடிச் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்ளிரவில் 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலொன்று புகுந்தது.
வீட்டிற்குள் இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் கயிற்றில் கட்டிப் போட்டு விட்டு, வீட்டில் இருக்கும் பொருட்களை திருடுவதில் தீவிரமாக இருந்தனர்.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பசியால் அழத் தொடங்கியது. உடனே செய்வதறியாது நின்ற கொள்ளையர்கள் தாயிடம் சென்று, அழுகையை நிறுத்த என்ன செய்யவேண்டும் எனக் கேட்க, 2 கரண்டி பாலுடன் சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கும்படி தாய் கூறினார்.
அதன்படியே அவர்கள் செய்ய, பாலை பருகியதும் குழந்தை அயர்ந்து தூங்கி விட்டது.
படுக்கையில் குழந்தையை வைத்து விட்டு சுமார் 2½ இலட்சம் ரூபா (சுமார் 5½ கோடி ரூபா) பெறுமதியான பொருட்களை திருடிக் கொண்டு கும்பல் தப்பி ஓடியது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பொலிஸாரிடம் புகார் அளிக்கவே கொள்ளைக் கும்பல் தலைவன் மிஸ்தா உட்பட 4 பேரை பிடித்தனர், ஒருவன் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating