பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்..!!

Read Time:2 Minute, 15 Second

images (5)இந்­தோ­னே­ஷி­யாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு, இலட்­சக்­க­ணக்கான பெறுமதிமிக்க பொருட்களை கும்­ப­லொன்று திருடிச் சென்­றமை  பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­தோ­னே­ஷி­யாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்­ளி­ரவில் 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்­ப­லொன்று புகுந்­தது.

வீட்­டிற்குள் இருந்த ஆண்கள், பெண்கள் அனை­வ­ரையும் கயிற்றில் கட்டிப் போட்டு விட்டு, வீட்டில் இருக்கும் பொருட்­களை திரு­டு­வதில் தீவி­ர­மாக இருந்­தனர்.

அப்­போது தூங்கிக் கொண்­டி­ருந்த குழந்தை பசியால் அழத் தொடங்­கி­யது. உடனே செய்­வ­த­றி­யாது நின்ற கொள்­ளை­யர்கள் தாயிடம் சென்று, அழு­கையை நிறுத்த என்ன செய்யவேண்டும் எனக் கேட்க, 2 கரண்டி பாலுடன் சிறிது வெந்நீர் கலந்து கொடுக்­கும்­படி தாய் கூறினார்.

அதன்­ப­டியே அவர்கள் செய்ய, பாலை பரு­கி­யதும் குழந்தை அயர்ந்து தூங்கி விட்­டது.

படுக்­கையில் குழந்­தையை வைத்து விட்டு சுமார் 2½ இலட்சம் ரூபா  (சுமார் 5½ கோடி ரூபா) பெறு­மதியான பொருட்­களை திருடிக் கொண்டு கும்பல் தப்பி ஓடி­யது.

இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தினர், பொலி­ஸா­ரிடம் புகார் அளிக்­கவே கொள்ளைக் கும்பல் தலைவன் மிஸ்தா உட்­பட 4 பேரை பிடித்­தனர், ஒருவன் மட்டும் சுட்டுக் கொல்­லப்­பட்டான்.

பயங்­கர ஆயு­தங்­க­ளுடன் கொள்­ளையில் ஈடு­பட்ட இந்த கும்பலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்டிகைக்கால களியாட்டங்களுக்கு ஏறாவூரில் இனி இடமளிக்கப்படாது; நகரசபை அறிவிப்பு..!!
Next post கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!