கூட்டமைப்பு முக்கிய புள்ளிகள் ஜனாதிபதியுடன் அடிக்கடி பேச்சு..!
Read Time:1 Minute, 15 Second
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் அண்மைய நாட்களாகத் தம்முடன் பேச்சுகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிரடித் தகவலொன்றைத் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் அடிக்கடி என்னை வந்து சந்தித்துக ;கொண்டிருக்கின்றனர்.
எங்களுக்கு வேட்புமனுக்கூடத் தேவையில்லை. ஆனால் மக்களுக்கான உங்கள் பணியுடன் சேர்ந்து இயங்கத் தயாராக இருக்கின்றோம் என அவர்கள் கூறுகின்றனர்.
எங்களுடன் இணைந்து பணியாற்ற அவர்கள் உறுதியளித்துள்ளனர் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Average Rating