வாஸ் குணவர்தனவின் மகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை..!
முன்னாள் பொலிஸ்மா அதிபரான வாஸ் குணவர்தனவின் மகன் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னி லையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததனையடுத்தே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதேவேளை, பம்பலப்பிட்டி வர்த்தகர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன் னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிது குணவர்த்தனவும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, மாணவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பிலும் ரவிது குணவர்த்தனவுக்கு கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதும் தெரிந்ததே. இவர் நீதிமன்றத்தில் சரணடையவுள்ளதாக முன்னர் கூறப்பட்டும் இதுவரை அவர் சரணடையவில்லை.
Average Rating