பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை..!!
தேர்தல் பிரசார நடடிக்கைகளின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத் தளபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிப்பை அடுத்து முஸ்லிம் வேட்பாளர் எம்.எம்.சீராசை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அவர், ‘தேர்தல் சுவரொட்டிகளில் பாதுகாப்பு செயலாளரின் புகைப்படத்தினைப் பயன்படுத்தியமையே வேட்பாளர் தெரிவின் இழுபறி நிலைக்கு காரணமாக அமைந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியின் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது பாதுகாப்பு செயலாளரின் புகைப்படத்துடன் உள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுமாறும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்
Average Rating