உடரட்ட மெனிக்கேவுடன் மோதி ஒருவர் தற்கொலை..!!
Read Time:44 Second
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 6ம் இலக்க அதிவேக உடரட்ட மெனிக்கே ரயில்முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றுமாலை ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகில் இதல்கஸ்ஹின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர் அடையாளம் காணப்படவில்லை.
சடலம் ஹப்புத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating