புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த சீனப் பெண் மரணம்..!!

Read Time:1 Minute, 58 Second

1461_newsthumb_frog-soupபுற்­று­நோயைக் குணப்­ப­டுத்த தவளை சூப் குடித்த பெண்  ஒருவர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

புற்­றுநோய், கல்­லீரல் நோய் ஆகிய­வற்றைத் தீர்க்க சீனாவில் ஒரு நாட்டு மருந்து தவளை ‘சூப்’ என்று சொல்­லப்­ப­டு­கி­றது. கிரா­மப்­பு­றங்­களில் இதை பாரம்­ப­ரிய மருத்­து­வ­மாக செய்து வரு­கி­றார்கள்.

இந்த ‘சூப்’ குடித்தால் உடலில் உஷ்ணம் ஏற்­பட்டு ஒரு­வகை நச்­சுக்­கி­ருமி உரு­வாகி புற்­றுநோய் கட்­டியை கரைத்து, விடும் என்­பது இவர்­களின் நம்­பிக்கை.

ஹொங்­கோயூ கிரா­மத்தில் வசிக்கும் 57 வயது பெண் ஒருவர் கல்­லீரல் கோளா­றி­னாலும், அவ­ரு­டைய கணவர் புற்­று­நோ­யாலும் அவ­திப்­பட்டு வந்­துள்­ளனர். இதற்­காக வீட்டில் தவளை ‘சூப்’ வைத்து 2 பேரும் குடிக்க அது விப­ரீ­தத்தில்  முடிந்­துள்­ளது. 2 பேரும்  சூப்பை குடித்­த­வுடன் வாந்­தி–­ம­யக்கம் ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளனர். அதில் பெண் பரி­தா­ப­மாக உயிர் இழந்­துள்ளார்.

கணவர் சிகிச்­சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டார். தவளை சூப்­பினால் இது­வரை உயிர் பலி ஏற்­பட்­ட­தில்லை என்றும், இப்­போது தான் முதல் தட­வை­யாக பெண் ஒருவர் உயிர் இழந்திருக்கிறார் என்றும் சீன சுகாதார துறை அதிகாரிகள்  தெரி­வித்­துள்­ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!
Next post சவூதியில் இணையத்தள ஆசிரியருக்கு 7 வருட சிறை, 600 கசையடி..!!