புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த சீனப் பெண் மரணம்..!!
புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
புற்றுநோய், கல்லீரல் நோய் ஆகியவற்றைத் தீர்க்க சீனாவில் ஒரு நாட்டு மருந்து தவளை ‘சூப்’ என்று சொல்லப்படுகிறது. கிராமப்புறங்களில் இதை பாரம்பரிய மருத்துவமாக செய்து வருகிறார்கள்.
இந்த ‘சூப்’ குடித்தால் உடலில் உஷ்ணம் ஏற்பட்டு ஒருவகை நச்சுக்கிருமி உருவாகி புற்றுநோய் கட்டியை கரைத்து, விடும் என்பது இவர்களின் நம்பிக்கை.
ஹொங்கோயூ கிராமத்தில் வசிக்கும் 57 வயது பெண் ஒருவர் கல்லீரல் கோளாறினாலும், அவருடைய கணவர் புற்றுநோயாலும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதற்காக வீட்டில் தவளை ‘சூப்’ வைத்து 2 பேரும் குடிக்க அது விபரீதத்தில் முடிந்துள்ளது. 2 பேரும் சூப்பை குடித்தவுடன் வாந்தி–மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் பெண் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
கணவர் சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டார். தவளை சூப்பினால் இதுவரை உயிர் பலி ஏற்பட்டதில்லை என்றும், இப்போது தான் முதல் தடவையாக பெண் ஒருவர் உயிர் இழந்திருக்கிறார் என்றும் சீன சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Average Rating