இருவேறு விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு..!!

Read Time:1 Minute, 29 Second

download (9)
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

தங்காலை –  பஹஜ்ஜாவெல பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்றும் உள்ளடங்குகின்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கொழும்பு அவிசாவளை பிரதான வீதியில் கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்

வேனொன்று பஸ் வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது முன்பாக வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் அஜித்திற்காக தற்கொலை செய்த 17 வயது மாணவி..!!
Next post மட்டக்களப்பில் சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்..!!