பொலிஸாரின் தேடுதலில் 218பேர் கைது..!!

Read Time:2 Minute, 55 Second

download (12)பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும்  காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுப்பகுதிகளில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 218 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெவ்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான வாராந்த ஊடக மாநாடு அண்மையில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதில் செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவு மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 218 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் அடித்துக் காயப்படுத்தியமை தொடர்பில்  23 பேரும், சந்தேகத்தில் 4 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரும், சட்டவிரோதமாக சாராயம் விற்ற 10 பேரும், களவு தொடர்பில் 4பேரும், மோசடி தொடர்பில் 2 பேரும், குடித்து விட்டு கலகம் விளைவித்த12 பேரும், களவாக மின்சாரம் பெற்ற 16 பேரும்,கொள்ளையுடன் தொடர்புடைய 5 பேரும் பாதுகாப்புக் கருதி ஒருவரும், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் ஒருவருமாக 114பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல காங்கெசன்துறைப் பொலிஸ் பிரிவில் அனுமதி இன்றி சாராயம் விற்ற 2 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4பேரும், சந்தேகத்தின் பேரில் 14 பேரும், குடித்து விட்டு வாகனம் செலுத்திய ஒருவரும், ஏனைய குற்றங்களுக்காக 63 பேரும் என 104 பேர் கைது செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாங்க காதலிக்கப் பழகலாம்.. கொல்கத்தாவில் ஒரு புதுமைப் படிப்பு..!!
Next post மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!