இராணுவத்தை சிவில் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாமென்கிறது ஜே.வி.பி…!!
Read Time:56 Second
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடையும் வரை இராணுவத்தினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் படி ஜே.வி.பி.தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுள்ளது.
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதால் தமது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இக் கோரிக்கையை விடுப்பதாக ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதன் படி சிவில் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை நீக்கி நீதியான நேர்மையான தேர்தலை நடத்த உதவும் படியும் அவர் கேட்டுள்ளார்.
Average Rating