திருட்டுத்தனமாக மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்தவர் கைது..!!
Read Time:1 Minute, 20 Second
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் திருட்டுத்தனமாக மாடு அறுத்து இறைச்சி விற்பனை செய்து வந்த குற்றம் தொடர்பில் நான்கு பிடியாணைகளுக்கு தலைமறைவாகவிருந்து வந்த நபரொருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் சார்ஜண்ட் யூ.எல்எம். ஆப்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரைக் கைது செய்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
இதன்போது ஒவ்வொரு வழக்குக்கும் மேலதிக சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜா உத்தரவிட்டார். அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த குறித்த நபர் பிடியாணைக்கு தலைமறைவாக அக்கரைப்பற்று பனை அறுப்பான் வயல் பிரதேசத்திலிருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating