கிரேண்ட்பாஸில் இருப்பது பள்ளிவாசல் அல்ல;அதனை அகற்றியே தீருவோம்; அப்பகுதி விகாராதிபதி..!!
Read Time:1 Minute, 21 Second
கிராண்ட்பாஸிலுள்ளது பள்ளிவாசலேயல்ல. எனவே அதனை அகற்றியே தீரவேண்டுமென அப்பகுதியிலுள்ள ஜயதிலக்கராமய விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; கிராண்ட்பாஸில் அமைந்துள்ளது பள்ளிவாசல் அல்ல. அது ஒரு தொழிற்சாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது.
நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் ரமழான் காலத்தை முன்னிட்டு 10.08.2013 வரை அதனை பயன்படுத்த அனுமதி கொடுத்தோம். ஆனால், அக்கட்டிடத்தை தொடர்ந்தும் பள்ளிவாசலாக பயன்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம். அது பள்ளிவாசலே அல்ல என்பதனால் அதனை அகற்றியே தீர வேண்டும்.
நாம் எதிர்க்கும் இக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ளதுதான் பள்ளிவாசல். அதனை நாம் எதிர்க்கவில்லை. அதற்கு தேவையானால் நாம் உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றார்.
Average Rating