மதில் உடைந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!!
Read Time:57 Second
திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மதில் மீதேறியபோது நேற்று அதன் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கடும் காயங்களுக்கு இலக்கான குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் நடைபெற்ற விசாரணைகளை அடுத்து குறித்த ஆண் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating