திருமணமாகி 15 வருடங்களுக்குள் குடும்பத் தகராறு தொடர்பில் 139 முறைப்பாடுகளை செய்த தம்பதி…!!
Read Time:1 Minute, 18 Second
திருமணமாகி 15 வருடங்கள் பூர்த்தியாகும்போது குடும்பத் தகராறு காரணமாக பொலிஸ் நிலையத்தில் 139 முறைப்பாடுகளை செய்துள்ள ஒரு தம்பதியினர் தொடர்பாக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தம்பதியினர் திருமணமாகி 15 வருடங்களாகின்றன. இவர்களுக்கு இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றனர். 15 வருடங்களில் கணவன் தன்னை துன்புறுத்துவதாக மனைவி 139 முறைப்பாடுகளை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளார்.
139 முறைப்பாடுகளையும் விசாரணை செய்த பொலிஸார் இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். 139 ஆவது முறைப்பாட்டை பொறுக்க முடியாத பொலிஸார் இந்த முறைப்பாட்டை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன் வைத்துள்ளனர்.
Average Rating