தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!!
Read Time:1 Minute, 12 Second
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதியின் சடலம் நேற்றுக்காலை 11 மணியளவில் கொட்டடிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் கொட்டடி முத்தமிழ் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை வினோதினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Average Rating