மரத்தில் ஏறி தாதி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!!
கண்டி பொது வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் மரத்தின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
வைத்தியசாலையின் இரு பெண் தாதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த எதிர்ப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் கண்டிக் கிளை தெரிவித்துள்ளது.
கண்டி பொது வைத்தியசாலை ஓய்வு அறை குறித்து தாதியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாட்டால் வைத்தியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.
சம்பவம் குறித்து சுகாதார அமைச்சு பெற்றுக்கொண்ட விசாரணை அறிக்கையில் தாதியர்கள் இருவரை இடமாற்றம் செய்யுமாறு கூறப்படவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் கண்டிக் கிளை குறிப்பிட்டுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வைத்தியர்களுக்கு சார்பாக செயற்படுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் கண்டிக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது.
Average Rating