பெண்ணை மிகக்கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஐமசுமு பி.சபை உறுப்பினர்..!!

Read Time:1 Minute, 54 Second

download (10)ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சம்பத் சமிந்த ஜயசிங்க தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பெண் ஒருவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்து உறுப்பினர் இரண்டு தடவைகள் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தன்னை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் திட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததை கையடக்கத் தொலைபேசியில் குரல் பதிவு செய்து கொண்டதாகவும் அதனை அத்துருகிரிய பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது சமாதானமாகச் செல்ல அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனினும் இப்பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டுள்ள தான் விரும்புவதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சம்பத் சமிந்த ஜயசிங்க குறித்த பெண்ணிடம் மிகவும் கடுமையாக தவறான கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை செய்து ஆபசமாகப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர் இயன் பொத்தம் 160 கி.மீ நடைபயணம்..!
Next post மாணிக்கக்கற்களை எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் கைது..!!