3 சிறார்கள் துஷ்பிரயோகம்; ஐ.ம.சு.மு உறுப்பினர்மீது முறைப்பாடு..!!
வயது குறைந்த மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல்வாதிக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அறிவித்துள்ளது.
திருமணமாகாத 45 வயதான குறித்த அரசியல்வாதி அந்த சிறுவர்கள் மூவரையும் நீண்டநாட்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர்கள் மூவரும் அவர்களுடைய பெற்றோர்களுடன் நுவரெலியா நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கொம்புக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமணமாகாத குறித்த அரசியல்வாதி நுவரெலியாவிற்கு அப்பால் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating