மகனுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்க, எஜமான் வீட்டில் திருடிய பணிப்பெண்..!!
Read Time:1 Minute, 20 Second
தனது மகனுக்கு கையடக்கத் தொலைபேசியொன்றை வாங்கிக் கொடுக்க தான் பணிபுரியும் வீட்டில் இரண்டு தங்கச் சங்கிலிகளைத் திருடிய பணிப்பெண்ணொருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரொருவரின் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றும் குறித்த பணிப்பெண் வீட்டில் 2 பவுண் எடையுள்ள இரண்டு தங்க சங்கிலிகளை காணாமற் போனவுடன் பணிப்பெண்ணிடம் 60 ஆயிரம் பணம் இருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பெண் வர்த்தகரின் வீட்டிலிருந்து வெளியேற முற்பட்ட போது வர்த்தகர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க பொலிஸார் பணிப்பெண்ணையும் அவரது புதல்வனையும் கைது செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating