புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்; கோத்தபாய..!!
இலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் காணாமல் போனவர் என்று அவரது தாயார் முறைப்பாடும் செய்திருந்தார்.
அத்துடன் குறித்த நபரின் தாயார்இ தனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் முறையிட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதுஇ காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating