கோயில்குளம் சிறுவர் பூங்காவினைத் திருத்தியமைக்க நடவடிக்கை..!!
Read Time:2 Minute, 15 Second
வவுனியா கோயில்குளம் உமா மகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா பல வருடங்களாக பழுதடைந்து புல் பற்றைகள் மண்டியநிலையில் காணப்படுகின்றது. இதனைத் திருத்தியமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் ஊடகங்கள் பலவும் இந்த சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலை குறித்து சுட்டிக்காட்டி வந்தன. அண்மையில் பிரதேச மக்கள் இவ்விடயத்தினை வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனையடுத்து வவுனியா நகரசபையினருடன் தொடர்பு கொண்ட திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கோயில்குளம் சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலையையும் அதனைத் திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்நிலையில் வெகுவிரைவில் சிறுவர் பூங்காவினைத் திருத்தியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பிரதேச மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளார்
இதேவேளை திரு.சந்திரகுலசிங்கம் அவர்கள் வவுனியா நகரசபை நிர்வாகத்தில் இருந்த காலத்தில் மேற்படி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள், வீதிகள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் வவுனியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating