தேர்தல் பணிகளுக்கு இராணுவ தடைகள் இருக்காது : தேர்தல் ஆணையாளர்..!!
Read Time:1 Minute, 20 Second
தேர்தல் திணைக்களத்தினுடைய பணிகளுக்கு எவ்விதத்திலும் இராணுவத்தின் தலையீடுகளோ குறுக்கீடுகளோ இருக்காது. வடமாகாண சபையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச அதிகாரிகள், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நோக்கிலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கிலும் தேர்தல்கள் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.பொது நூலகத்தில் அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், மற்றும் தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Average Rating