மூழ்கிய படகில் 5 பேர் உயிரிழப்பு..!!
Read Time:59 Second
அவுஸ்ரேலிய கடற்பரப்பில் நேற்று மூழ்கிய படகில் பயணித்தவர்களில் 5 பேர் பலியானதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
105 அகதிகளுடன் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி வந்த படகு ஒன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் வைத்து கடலில் மூழ்கியுள்ளது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மீட்பின் போது 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், 5 பேர் மட்டும் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
பலியானர்களில் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
Average Rating