வெளிநாட்டவரிடம் 11 லட்சம் களவாடிய மூவர் கைது..!!
Read Time:48 Second
வெளிநாட்டு பிரஜை ஒருவரிடம் 1134000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூவர் 100000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரத்மலான பகுதியில் வைத்து குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ரம்மலான மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் பஸ் பயணிகளின் பணம், நகை, தொலைபேசி என்பவற்றை திருடுபவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு புறநகர் கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
Average Rating