14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சித்தப்பா..!!
14 மாத குழந்தையின் தலையில் குட்டி கொலைசெய்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலையாளியான குழந்தையின் சிறிய தந்தையை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் என்.டப்ளியூ. லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
விஷம் அருந்திய உடபுஸ்ஸல்வாவை ரபான தோட்டத்தில் வசித்து வரும் 38 வயதான ஜே.எம். சூரசேன என்ற சந்தேக நபர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் நீதவான் வைத்தியசாலைக்கு சென்று அந்த நபரை பார்வையிட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 14 மாத குழந்தையான அமிர்தராஜா அனுஷா என்ற குழந்தையையே சந்தேக நபர் கொலை செய்துள்ளார்.
சந்தேக நபரின் மனைவி கடந்த 16 ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் குழந்தையை தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மறுநாள் குழந்தை சுகவீனமுற்றிருப்பதாக கூறி சந்தேக நபர் குழந்தையை வெலிமடை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார்.
Average Rating