மைத்துனனை குத்திக் கொன்ற நபர் தலைமறைவு..!!
Read Time:1 Minute, 1 Second
கொழும்பு, வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலேவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெலேவத்தையைச் சோ்ந்த 26 வயது நிரம்பிய லக்மால் சிந்தன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் வீட்டில் அவரது மைத்துனனுடன் ஏற்பட்ட பிரச்சினையே இக்கொலை ஏற்படுவதற்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிடிய பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்
Average Rating