மனிதர்கள் கூண்டில், மிருகங்கள் வெளியே..!!
மிருகங்கள் கூண்டில் அடைப்பட்டிருக்க அவற்றை பார்வையாளர்கள் வெளியிலிருந்து பார்த்து மகிழ்வதே அநேக மிருகக்காட்சிசாலைகளில் இடம்பெறுகின்றன.
ஆனால், நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்சில் உள்ள ஒரானா வனவிலங்குப் பூங்காவில் வாகனத்தில் அமைக்கப்பட்ட கூண்டொன்றினுள் இருந்தவாறு வெளியில் நடமாடும் சிங்கங்களை கண்டு மகிழமுடியும்.
பார்வையாளர்கள் பயணிக்கும் கூண்டின் மீது பூங்காவிலுள்ள சிங்கங்கள் ஆக்ரோஷமாக பாயும் திகில் அனுபவத்தை பெறமுடியும்.
மேலும் பார்வையாளர்களுடன் பயணிக்கும் பூங்கா அதிகரிகள் விலங்குகளுக்கு உணவும் அளிக்கின்றனர்.
நாங்களும் விலங்குகளுக்கு உணவளிக்க முடியும்.
இத்திகில் அனுபவத்திற்காக ஒரு பார்வையாளரிடமிருந்து 30 அமெரிக்க டொலர் பெறுமதியான கட்டணம் அறவிடப்படுகிறது.
மேற்படி வனவிலங்குப் பூங்காவில் சுமார் 70 இனத்தைச் சேர்ந்த 400 விலங்குகள் உள்ளதுடன் இது சுமார் 80 ஹெக்டேயரில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating