ஐரோப்பிய களியாட்ட விழா வன்முறை தொடர்பில் 279 பேர் கைது..!!

Read Time:1 Minute, 57 Second

1852_newsthumb_thumபிரிட்­டனில் நடை­பெற்ற பாரிய களி­யாட்ட விழா­வொன்றின் போது பார்­வை­யா­ளர்­க­ளி­டையே வன்­மு­றைகள் மூண்­ட­துடன் நூற்­றுக்­க­ணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

நோட்­டிங்ஹாம் ஹில் கார்­னிவேல் என அழைக்­கப்­படும் இக்­க­ளி­யாட்ட விழா கடந்த ஞாயிறு, திங்கள் தினங்­களில் மேற்கு லண்­டனில் நடை­பெற்­றன.

ஐரோப்­பாவின் மிகப்­பெ­ரிய வீதிக்­க­ளி­யாட்ட விழா இது­வாகும். 1960 ஆம் ஆண்டு முதல் லண்­டனில் இவ்­விழா நடை­பெ­று­கி­றது.

பிரே­ஸிலில் நடை­பெறும் சம்பா திரு­வி­ழாவில் போன்ற ஆடை­ய­லங்­கா­ரங்­க­ளுடன் ஆயி­ரக்­க­ணக்­கான நடனக் கலை­ஞர்கள் இதில் பங்­கு­பற்­றினர். இவ்­வி­ழாவை பார்­வை­யி­டு­வ­தற்கு 10 இலட்­சத்­துக்­கும்­அ­தி­க­மானோர் வீதி­களில் திரண்­டி­ருந்­தனர்.

ஆனால் களிப்பூட்டும் விழா­வாக மாத்­திரம் இது அமை­ய­வில்லை. பெரும் எண்­ணிக்­கை­யான பார்­வை­யா­ளர்கள் மது­போ­தையில் வன்­மு­றையில் ஈடு­பட்­டனர்.

இதனால் 279 பேர்  லண்டன்  பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.  தாக்­குதல் தொடர்­பாக மாத்­தி­ர­மல்­லாமல் போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­கா­கவும் பாலியல் குற்­றங்­க­ளுக்­கா­கவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விழா முடிந்தபின் பல வீதிகள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன.

1852e3

1852e2

1852_newsthumb_thum

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்பு: அவுஸ்திரேலியாவில் ஐவர் கைது..!!
Next post வடகொரியாவில் அதிபரின் முன்னாள் காதலி உள்பட 12 பேருக்கு மரண தண்டனை..!!