ஐரோப்பிய களியாட்ட விழா வன்முறை தொடர்பில் 279 பேர் கைது..!!
பிரிட்டனில் நடைபெற்ற பாரிய களியாட்ட விழாவொன்றின் போது பார்வையாளர்களிடையே வன்முறைகள் மூண்டதுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோட்டிங்ஹாம் ஹில் கார்னிவேல் என அழைக்கப்படும் இக்களியாட்ட விழா கடந்த ஞாயிறு, திங்கள் தினங்களில் மேற்கு லண்டனில் நடைபெற்றன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய வீதிக்களியாட்ட விழா இதுவாகும். 1960 ஆம் ஆண்டு முதல் லண்டனில் இவ்விழா நடைபெறுகிறது.
பிரேஸிலில் நடைபெறும் சம்பா திருவிழாவில் போன்ற ஆடையலங்காரங்களுடன் ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்கள் இதில் பங்குபற்றினர். இவ்விழாவை பார்வையிடுவதற்கு 10 இலட்சத்துக்கும்அதிகமானோ
ஆனால் களிப்பூட்டும் விழாவாக மாத்திரம் இது அமையவில்லை. பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்கள் மதுபோதையில் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் 279 பேர் லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக மாத்திரமல்லாமல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் பாலியல் குற்றங்களுக்காகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விழா முடிந்தபின் பல வீதிகள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன.
Average Rating