மலவாயிலில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல், ஆசாமி சிக்கினார்..!!

Read Time:1 Minute, 16 Second

download (6)தங்க பிஸ்கட்டுகளை மிகவும் சூட்சுமமாக மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நபரொருவரை நீர்கொழும்பு, கட்டுநாயக்க, சுங்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 36 வயதான குறித்த நபர் 3 தங்க பிஸ்கட்டுகளையும் மிகவும் சூட்சுமமான முறையில் ஆணுறையில் வைத்து மலவாயிலில் மறைத்து வைத்துக் கொண்டு செல்கையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மறைத்து வைத்துக் கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் நிறை 621 கிராம் எனவும் அவற்றின் பெறுமதி 31 இலட்சம் ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி, இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை..!!
Next post வடமராட்சி கிணற்றிலிருந்து 40 எலும்புக் கூடுகள் மீட்பு..!!