வடமராட்சி கிணற்றிலிருந்து 40 எலும்புக் கூடுகள் மீட்பு..!!
யாழ்நகர் நிருபர் வடமராட்சி பல்லப்பை பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிணறுகளிலிருந்து சுமார் 40 மனித எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளும் மீட்கப்பட்டதாக பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிணற்றுக்குள் இருந்த எலும்புக் கூடுகளையும் மண்டையோட்டு எச்சங்களையும் இராணுவத்தினரே அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக தெரிவித்த அவர், இந்த விடயத்தில் பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றிற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜனா கருணாகரம் மற்றும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினர் பரராஜசேகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating