கிரானில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு..!!
Read Time:52 Second
மட்டக்களப்பு கிரான் மயிலந்தன்னை கிராமத்தின் வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயிலந்தன்னை வயல் வெளியில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நேற்று மாலை இவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளார்.
Average Rating