5 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு..!!
Read Time:1 Minute, 6 Second
இங்கிலாந்தில் வோர் சர்ஷிர் ஆற்றங்கரையில் ஒருவர் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது மண்ணுக்குள் புதைந்து பாதி தெரிந்த நிலையில் ஏதோ கிடந்தது. முதலில் அதை ஏதோ ஒரு விலங்கின் மண்டை ஓடு என நினைத்து சென்றுவிட்டார். பின்னர் அருகில் வந்து பார்த்த போதுதான் அது ஒரு மனித மண்டை ஓடு என தெரியவந்தது.
அதை எடுத்த அவர் நிபுணர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அது பரிசோதிக்கப்பட்டது. அதில், இந்த மண்டை ஓடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணுடையது என தெரியவந்தது.
அதன் உள்புறத்தில் ரத்த நாளங்கள் ஓடியதற்கான அடையாளங்கள் இருந்தன. இந்த மண்டை ஓடு புதிய கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Average Rating