ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்­ய முயற்சி..!!

Read Time:1 Minute, 57 Second

images (4)ஆடைத் தொ­ழிற்­சா­லையில் கட­மை­யாற்றும் யுவ­தி­களை ஏற்றிச் செல்லும் வாக­ன­மொன்றை பலாத்­கா­ர­மாக நிறுத்தி அதில் பயணம் செய்த யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்த முயற்­சித்­தமை தொடர்­பாக மூன்று இளை­ஞர்­களை பயா­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மூன்று இளை­ஞர்­க­ளையும் களுத்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்த போது அடை­யாள அணி­வ­குப்­புக்­குட்­ப­டுத்­து­வ­தற்­காக இன்று 3ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நீதிவான் அருண அளுத்கே உத்­த­ர­விட்டுள்ளார்.

மக்­கொ­னயைச் சேர்ந்த டபிள்யூ.கே.அத்துன் பெர்­னாண்டோ,கே.அயேரா நிவந்­தக, ரோஹண குமார ஆகி­யோரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி ஆடைத் தொழிற்­சா­லையில் கடமை முடிந்து தொழிற்­சாலை வாக­ன­மொன்றில் தங்­க­ளது இருப்­பி­டங்­க­ளுக்கு சென்று கொண்­டி­ருந்த போது முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வாக­னத்தை பின் தொடர்ந்த சந்­தேக நபர்கள் முச்­சக்­கர வண்­டியை குறுக்­காக நிறுத்தி யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்த முயற்­சித்­துள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்த குற்­றப் ­பத்­தி­ரி­கையில் தெரி­வித்­துள்­ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தற்கொலை அல்ல: கொலை..!!
Next post முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்’..!!