அரியநேத்திரனிடம் ரி.ஐ.டி விசாரணை..!!

Read Time:2 Minute, 40 Second

images (7)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம்  பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் 90 நிமிடங்கள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணைக்கான அழைப்பு கடிதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஊடாக கடந்த செவ்வாய்;க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள புலி சந்தேகநபரொருவருடன்  கையடக்க தொலைபேசியில் தான் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டே என்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டீருந்தன.

சிறைச்சாலையில் கைதிகளிடம் தொலைபேசி இருப்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை என நான் பதிலளித்தேன்.

சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்த போதிலும் விசாரணையின் போது சட்டத்தரணிக்கு அங்கிருக்க அனுமதி வழங்கப்படவில்லை.

என்னிடம் சுமார் 90 நிமிடங்கள்; விசாரணைகள் நடைபெற்றதுடன் வாக்கு மூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கைதிகளிடம் தொலைபேசி இருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. ஆனால், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை தெரிவிப்பது வழக்கமாகும்.

அது மட்டுமல்ல எனது கைத்தொலைபேசிக்கு அழைப்புகள் வந்து துண்டிக்கப்பட்டால் அல்லது தவறான அழைப்புகள் வந்தால் தான் அந்த இலக்கங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தொடர்பை ஏற்படுத்தி உரையாடுவது வழமையாகும் என்றும் வாக்குமூலமளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு கடிக்கு இலக்காகி சாதாரணதர மாணவன் உயிரிழப்பு..!!
Next post 193 கி.மீ. வேகத்தில் மோதி அந்தரத்தில் சுழன்ற படகுகள்..!!