மகனின் கைத்தொலைபேசியை திருடி மருமகளின் தாயாருக்கு விற்பனை செய்த பெண் கைது..!!
தனது மகனின் கைத்தொலைபேசியைத் திருடி தனது மருமகளின் தாயாருக்கு விற்பனை செய்தவரையும் அதை கொள்வனவு செய்த மருமகளின் தாயாரையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி கட்டுகஸ்தோட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து 31,100 ரூபா பெறுமதியான தங்க நகைகள், பணம் மற்றும் கைத் தொலைபேசி ஆகியன கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் கைத் தொலைபேசியின் சிம்மை உபயோகித்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனையின்படி அந்தக் கைத்தொலைபேசி முறைப்பாட்டளரின் மனைவியின் தாயிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அந்த கைத் தொலைபேசி முறைப்பட்டாளரின் உறவினரால் மனைவியின் தாயாருக்கு 1000 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கைத் தொலைபேசியை திருடியது மற்றும் திருட்டுப் பொருளை தம்வசம் வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக முறைப்பாட்டாளரின் உறவினர். மற்றும் மனைவியின் தாயாரை கைது செய்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating