செயற்கைக் கருவூட்டல் முறையில் ஆஸ்திரேலியன் மருத்துவர்கள் சாதனை..!!

Read Time:2 Minute, 38 Second

download (7)ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் தோன்றிய புற்றுநோய் காராணமாக தாயாகும் பாக்கியத்தை இழந்தார்.

அவருக்கு செயற்கைக் கருவூட்டல் முறையில் முயற்சி செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது வெட்டியெடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.

அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு கருமுட்டை வளருவதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர்.  சில வருடங்களின் தொடர் முயற்சிக்குப் பின், தற்போது 26 வயதான வலி 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராயல் மெல்போர்ன் மருத்துவமனையும், செயற்கைக் கருவூட்டல் முறை மருத்துவர்கள் குழு ஒன்றும் இணைந்து இந்த சாதனையைப் புரிந்துள்ளன.

வலி கருவுற்றிருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் தாங்கள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக அவரது மருத்துவரான கேட் ஸ்டேர்ன் தெரிவித்தார்.

வலியின் ஒத்துழைப்பும் அபாரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.கருப்பை திசுவைப் பயன்படுத்தி கரு உருவாக்குதல் மிகவும் பாதுகாப்பானது என்பது இந்த முயற்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது

தனக்கு திருப்தி அளித்துள்ளதாக மொனாஷ் ஐவிஎப் மையத்தின் நிறுவன இயக்குநர் கப் கோவாஸ் தெரிவித்துள்ளார்.

வலியின் கருப்பை திசு ஏழு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டிருந்தது.

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தாயாகும் வாய்ப்பினை இழந்து விடக்கூடும் பெண்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்துவதைத் தான் பரிந்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆனையிறவில் விபத்து படைவீரர் பலி; 7பேர் காயம்..!!
Next post மகனின் கைத்தொலைபேசியை திருடி மருமகளின் தாயாருக்கு விற்பனை செய்த பெண் கைது..!!