தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்களிக்க மீண்டும் சந்தர்ப்பம்
நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் தாம் தொழில் புரியும் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் தெரிவத்தாட்சி அலுவலகர் முன்னிலையில் தமது வாக்குகளை செலுத்த முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு, மத்திய, வடமேல் மாகாண ங்களின் கீழ் வாக்குரிமை பெற்றுள்ள அரசாங்க ஊழியர்களின் வசதி கருதி நாடு முழுவதும் கடந்த 9, 10 ஆகிய திகதிகளில் அரசாங்க அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு நடாத்தப் பட்டது. இதில் வாக்களிக்க தவறியவர்களுக்கே இச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating