ஜே வி பி செய்வதை, சரத் செய்ய முடியாது -வாசுதேவ நாணயக்கார
Read Time:1 Minute, 4 Second
ஜே வி பி மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளமுடியாது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்
தமது கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக ஜனநாய கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே வாசுதேவ தமது கருத்தை வெளியிட்டுள்ளார்
ஜே வி பி எதிர்க்கட்சியாக செய்ய வேண்டிய பணிகளை செய்கிறது சில வேளைகளில் தடம்மாறி போகிறது
எனினும் சரத் பொன்சேகா ஊழலை ஒழிக்கப் போவதாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறுகிறார். இது சாத்தியப்படாத விடயம் என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்
Average Rating