வயதுக் குழப்பத்தால் பதக்கத்தை இழக்கும் நெருக்கடியில் 78 வயது தடகள வீரர்!!
பிரித்தானியாவைச் சேர்ந்த 78 வயதான ஜல்மேன் சிங் என்ற முதிய தடகளவீரர் பெற்ற தங்கப் பதக்கம் ஒன்று, வயதுக் குழப்பத்தினால் பறிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்மேன் சிங்க கடந்த 2010ஆம் ஆண்டில் 70:74 வயதுக்குட்பட்ட பிரிவில் பென்டல்தன் விளையாட்டில் பங்குபற்றி வெற்றி பெற்றார்.
ஆனால் அப்போது அவருக்கு எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று வயது அதிகம் என போட்டி நிர்வாகம் தகவல் வெளியிட்டதனையடுத்தே இவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்படவுள்ளது.
இது குறித்து ஜல்மேன் சிங் கூறுகையில், என்னிடம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை. இந்தியாவில் கல்வி கற்கும் காலத்திலிருந்தே இந்த குழப்பம் ஏற்பட்டது.
’11 வயதிலே நான் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தேன். அப்போது எனது ஆசிரியர் 7 வயது என பதிவு செய்தார். பின்னர் அதுவே எனது வயதாகி விட்டது. ஆனால் தவறான வயதினைக் கொண்டு நான் எதனையும் பெறவில்லை. இது ஒரு குழப்பம் மட்டுமே’ என ஜல்மேன் தெரிவிதுள்ளார்.
70 வயதினைக் கடந்த போதிலும் தற்போதும் ஜல்மேன் சிங் போட்டிகளில் பதக்கங்களை வெற்றி பெற்று வருகிறார்.
அண்மையில் பேர்மிங்ஹாமிங்கில் நடைபெற்ற பிரிட்டிஸ் மாஸ்டர் அத்லெடிக் பெடரேஷன் மீட்டில் உயரம் பாய்தல் மற்றும் குண்டு போடுதல் போட்டிகளில் பங்குபற்றி வெண்கல பதங்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating